/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செவ்வாழை வரத்து சரிவு: விலை உயர வாய்ப்பு
/
செவ்வாழை வரத்து சரிவு: விலை உயர வாய்ப்பு
ADDED : ஆக 07, 2025 07:49 PM
கிணத்துக்கடவு:
கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் செவ்வாழை வரத்து குறைந்துள்ள நிலையில், அடுத்த வாரம் விலை உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை பயிரிடப்பட்டுள்ளது. அறுவடை செய்யப்படும் வாழைத்தாரை, விவசாயிகள் கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் விற்பனை செய்கின்றனர்.
மார்க்கெட்டில், நேற்று செவ்வாழை கிலோ -- 70, நேந்திரன் --- 35, பூவன் --- 38, கதளி --- 35, ரஸ்தாளி --- 45 மற்றும் சாம்பிராணி -- 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த வாரத்தை காட்டிலும், தற்போது நேந்திரன் கிலோ -- 5, ரஸ்தாளி --- 3 மற்றும் பூவன் --- 3 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'மார்க்கெட்டிற்கு நேற்று வாழைத்தார் வரத்து குறைவாக இருந்தது. குறிப்பாக, செவ்வாழை தார் வரத்து குறைந்துள்ளது. இதனால், அடுத்த வாரம் விலை உயர வாய்ப்புள்ளது,' என்றனர்.