/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து சரிவு விலை அதிகரிப்பு
/
வாழைத்தார் வரத்து சரிவு விலை அதிகரிப்பு
ADDED : ஜன 30, 2025 11:14 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழைத்தார் வரத்து குறைந்த நிலையில், விலை அதிகரித்துள்ளது.
கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். அறுவடை செய்யப்படும் காய்கறி மற்றும் வாழைத்தாரை, தினசரி மார்க்கெட்டில் விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.
மார்க்கெட்டில் தற்போது செவ்வாழை கிலோ - - 70, நேந்திரன் --- 60, ரஸ்தாளி --- 45, பூவன் --- 35, சாம்பிராணி வகை --- 40, கதளி --- 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த வாரத்தை விட, தற்போது நேந்திரன் கிலோ - - 25, ரஸ்தாளி --- 3, சாம்பிராணி வகை --- 5 மற்றும் கதளி --- 15 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தை விட, வாழைத்தார் வரத்து சரிந்துள்ளது. இதனால், விலை சற்று அதிகரித்துள்ளது,' என்றனர்.