/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர வாய்ப்பு
/
வாழைத்தார் வரத்து சரிவு; விலை உயர வாய்ப்பு
ADDED : ஜூன் 11, 2025 09:24 PM
கிணத்துக்கடவு,; கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், தனிப்பயிராகவும், தென்னையில் ஊடுபயிராகவும், விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யப்படும் வாழைத்தார்களை, கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டுக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
விவசாயிகள் கொண்டு வரும் வாழைத்தாருக்கு, ஏலம் முறையில் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நேற்று, செவ்வாழை (கிலோ) --- 70, நேந்திரன் --- 40, பூவன் --- 37, கதளி -- 30, ரஸ்தாளி --- 45, சாம்பிராணி --- 45 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த வாரத்தை விட, தற்போது பூவன் மற்றும் கதளி - 2 ரூபாயும், ரஸ்தாளி - 5 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. மற்ற வகை வாழைத்தார் விலையில் மாற்றம் இல்லை.
வியாபாரிகள் கூறியதாவது, 'மார்க்கெட்டுக்கு நேற்று வாழைத்தார்கள் வரத்து குறைவாக இருந்தது. இதனால், வாழைத்தார் விலை அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் வரத்தும், விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.