/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரூ.1.36 கோடிக்கு வங்கி கடனுதவி
/
ரூ.1.36 கோடிக்கு வங்கி கடனுதவி
ADDED : ஆக 20, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; முன்னாள் படை வீரர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கோவையில் உள்ள முன்னாள் படை வீரர்கள் இருவருக்கு, சுயதொழில் துவங்க, ரூ.9.81 லட்சம் மானியத்துடன், ரூ.1.36 கோடிக்கு வங்கி கடனை கலெக்டர் வழங்கினார்.
இத்திட்டத்தில், 30 சதவீதம் மூலதன மானியம் கிடைக்கும். முன்னாள் படைவீரர்களுக்காக மட்டுமே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் இணைந்து பயனடைய, மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.