sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 04, 2025 ,கார்த்திகை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பத்திரம் தொலைத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

/

 பத்திரம் தொலைத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

 பத்திரம் தொலைத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு

 பத்திரம் தொலைத்த வங்கி இழப்பீடு வழங்க உத்தரவு


ADDED : டிச 04, 2025 08:16 AM

Google News

ADDED : டிச 04, 2025 08:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: இருகூரை சேர்ந்த விஜயகுமார், மனைவி தனம், மகன் ஸ்ரீவசந்த் ஆகியோர் சேர்ந்து, கோவை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டிலுள்ள, பாரத ஸ்டேட் வங்கி பிரதான கிளையில்(ஆர்ஏசிபிசி),2014 பிப்.,15ல், 42 லட்சம் ரூபாய் வீட்டு கடன் வாங்கினர்.

இதற்காக அசல் சொத்து பத்திரத்தை அடமானமாக கொடுத்தனர். கடன் முழுவதும் செலுத்திய பிறகு, சொத்து அசல் பத்திரத்தை திரும்பிதருமாறு கேட்ட போது, தொலைந்து விட்டதாக வங்கி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட விஜயகுமார் மற்றும் குடும்பத்தினர் இழப்பீடு கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

விசாரித்த ஆணைய தலைவர் தட்சிணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரரின் புகார் பகுதியாக அனுமதிக்கப்படுகிறது. மனுதாரருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு இழப்பீடாக, 20,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us