/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி. திட்ட செயல்பாடுகள் விரைவில் ஆலோசனை
/
பி.ஏ.பி. திட்ட செயல்பாடுகள் விரைவில் ஆலோசனை
ADDED : டிச 22, 2025 05:27 AM
பி.ஏ.பி., திட்ட செயல்பாடுகள் மற்றும் நீர் நிர்வாகம் குறித்து ஆலோசிக்க, ஜன. முதல் வாரத்தில் கூட்டம் நடத்தப்படும்'' என்று கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறினார்.
திருப்பூர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள், தங்களது கோரிக்கையை விளக்கி பேசினர். இதில், பி.ஏ.பி., நீர்நிர்வாகம் குறித்த பல்வேறு புகார்கள் விவசாயிகளால் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, திட்ட செயல்பாடுகள் குறித்து விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்தப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
- நமது நிருபர் -:

