sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிரப்பள்ளி அருவியில் குளிக்க தடை

/

அதிரப்பள்ளி அருவியில் குளிக்க தடை

அதிரப்பள்ளி அருவியில் குளிக்க தடை

அதிரப்பள்ளி அருவியில் குளிக்க தடை


ADDED : மே 21, 2025 06:34 AM

Google News

ADDED : மே 21, 2025 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை : கேரள மாநிலம், சாலக்குடி அருகேயுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் பருவமழையால் மழை வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், சுற்றுலா பயணியர் குளிக்க, அம்மாநில வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை ரோட்டில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இருமாநில சுற்றுலா பயணியர் அதிகளவில் இங்கு சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களாக மழைப்பொழிவு குறைந்ததால் சுற்றுலா பயணியர் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

இந்நிலையில், கடந்த வாரம் முதல் கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கியதையடுத்து, அதிரப்பள்ளி, சார்பா உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், சுற்றுலா பயணியர் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சாலக்குடி வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தென்மேற்கு பருவமழை துவங்கியதையடுத்து, அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால், சுற்றுலா பயணியர் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொலைவில் இருந்தபடி நீர்வீழ்ச்சியை கண்டு ரசிக்கலாம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us