தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஜனை, முற்றோதல் பக்தர்கள் பரவசம்

 பஜனை, முற்றோதல் பக்தர்கள் பரவசம்

 பஜனை, முற்றோதல் பக்தர்கள் பரவசம்


ADDED : ஜன 05, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 05:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சூலூர்: சூலூர் வட்டார கோவில்களில் நடந்த பஜனை, முற்றோதல் மற்றும் அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

சூலூர் ஐயப்ப சேவா சங்கம் சார்பில், காங்கயம் பாளையம் அய்யப்பன் கோவிலில் பஜனை நடந்தது. இதில், பங்கேற்ற ஏராளமான பக்தர்கள் பக்தி பாடல்களை பாடி வழிபட்டனர். தொடர்ந்து அன்னதானம் நடந்தது.

சூலூர் பழைய அங்காளம்மன் கோவிலில், திருவாசகம் முற்றோதல், பாவைத்திருவிழா நடந்தன. பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் அருளாசி வழங்கினார். ஏராளமான பக்தர்கள் வழிபாடுகள் நடத்தினர்.

சூலூர் அறுபடை முருக பக்தர்கள் குழு சார்பில், சூலூர் சிவன் கோவிலில், 53ம் ஆண்டு அன்னதான விழா நடந்தது. ஆதின பெரியவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us