/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாரதியார் தின கால்பந்து போட்டி; கோவைக்கு இரண்டாமிடம்
/
பாரதியார் தின கால்பந்து போட்டி; கோவைக்கு இரண்டாமிடம்
பாரதியார் தின கால்பந்து போட்டி; கோவைக்கு இரண்டாமிடம்
பாரதியார் தின கால்பந்து போட்டி; கோவைக்கு இரண்டாமிடம்
ADDED : ஜன 31, 2024 11:52 PM

கோவை : பள்ளி மாணவர்களுக்கான மாநில அளவிலான கால்பந்து போட்டியில், கோவை ராகவேந்திரா பள்ளி அணி இரண்டாமிடம் பிடித்தது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான 'பாரதியார் தின' கால்பந்து போட்டி, ஜன., 29,30, 31 ஆகிய தேதிகளில் கோவையில் நடந்தது.
இப்போட்டியில் 38 மாவட்ட அணிகள் மற்றும் இரண்டு எஸ்.டி.ஏ.டி., (தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்) அணிகள் பங்கேற்றன. நேற்று, பாரதியார் பல்கலை மைதானத்தில் நடந்த இறுதிப்போட்டியில், சென்னை டான் போஸ்கோ மற்றும் கோவை ராகவேந்திரா பள்ளி அணிகள் விளையாடின.
பரபரப்பாக நடந்த இப்போட்டியில், இரு அணியினரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ராகவேந்திரா அணியினர் கிடைத்த சில வாய்ப்புகளை நழுவ விட, டான் போஸ்கோ அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது. கோவை ராகவேந்திரா அணி இரண்டாமிடம் பிடித்தது.
மூன்றாமிடத்துக்கான போட்டியில், திருவள்ளூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில், நீலகிரி செயின்ட் ஜோசப் அணியை வீழ்த்தியது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கோவை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், நீலகிரி உடற்கல்வி ஆய்வாளர் பெரியசாமி, மருதமலை சுப்பிரமணிய சாமி கோவில் தேவஸ்தான பள்ளி தலைமையாசிரியை செல்வகுமாரி, மூத்த உடற்கல்வி ஆசிரியர்கள் ஜேம்ஸ், விஜயகுமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பரிசுகளை வழங்கினர்.