/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிக்கப் வாகனம் மீது பைக் மோதல்; இளைஞர் பலி
/
பிக்கப் வாகனம் மீது பைக் மோதல்; இளைஞர் பலி
ADDED : அக் 16, 2025 09:03 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையில் உள்ள ஏ.கே.எஸ்., காலனியை சேர்ந்தவர் முகமது அசாருதீன், 22.இவர் மேட்டுப்பாளையம் பழைய இரும்பு மார்க்கெட்டில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து தனது பைக்கில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, ஏ.கே.எஸ்., காலனி அருகே முன்னாள் சென்ற பிக்கப் வாகனத்தை முந்த முயன்ற போது எதிர்பாராத விதமாக பிக்கப் வாகனத்தின் மீது மோதியதில், தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.