sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பில்லுார் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது

/

பில்லுார் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது

பில்லுார் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது

பில்லுார் அணை மூன்றாவது முறையாக நிரம்பியது


ADDED : ஜூன் 25, 2025 10:48 PM

Google News

ADDED : ஜூன் 25, 2025 10:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 15 ஆயிரத்து, 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், முழு கொள்ளளவையும் எட்டி, மூன்றாவது முறையாக நிரம்பி வழிகிறது.

கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணையின் நீர்மட்டம், 85.75 அடியாக இருந்தது. பில்லூர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான அப்பர் பவானி, அவலாஞ்சி மற்றும் கேரளாவில் கனமழை பெய்ததை அடுத்து, நேற்று மாலை, 5:00 மணிக்கு, பில்லூர் அணைக்கு வினாடிக்கு, 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டம், வெகுவாக உயர்ந்து, 95 அடியாக உயர்ந்தது. இரவு, 7:00 மணிக்கு அணையில் நீர்மட்டம், முழு கொள்ளளவான, 97 அடியை எட்டி, நிரம்பி வழிந்தது.

அதன் பின் அணைக்கு வருகின்ற, வினாடிக்கு, 15 ஆயிரத்து, 120 கன அடி தண்ணீர் முழுவதையும், அப்படியே நான்கு மதகுகள் வழியாக, தலா 3,000 ஆயிரம் கன அடி தண்ணீரும், மின்சாரம் உற்பத்தி செய்ய, 3,000 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இரண்டு மாதத்தில் மூன்றாவது முறையாக, பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.






      Dinamalar
      Follow us