ADDED : ஏப் 13, 2026 10:12 PM

அன்னுார்: பிரசாரத்தில் பா.ஜ., நிர்வாகி மயங்கி விழுந்து இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவிநாசி தொகுதியில், தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ஜ., வேட்பாளர் முருகன் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் இரவு பா.ஜ., பிரசார பிரிவு கோவை வடக்கு மாவட்ட செயலாளர் கேசவ நடராஜன், 53, நிர்வாகிகளுடன், அன்னுாரில், கடைகளில் கட்சி துண்டு பிரசுரம் விநியோகித்துக் கொண்டிருந்தார்.
திடீரென மயங்கிய அவரை, உடனிருந்தவர்கள், அன்னுார் அரசு மருத்துவமனை அழைத்து சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.
அன்னுார் ஜீவா நகரில் உள்ள அவரது இல்லத்தில், அவரது உடலுக்கு, மத்திய இணையமைச்சரும் அவிநாசி தொகுதி பா.ஜ., வேட்பாளருமான முருகன், பா.ஜ., ஆர்.எஸ்.எஸ். இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி செலுத்தினர். அன்னுார் மின்மயானத்தில் நேற்று மாலை இறுதிச்சடங்கு நடந்தது.
