/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க. ஒட்டிய முட்டை போஸ்டர் கிழித்த பா.ஜ. தொண்டர்கள் கைது
/
தி.மு.க. ஒட்டிய முட்டை போஸ்டர் கிழித்த பா.ஜ. தொண்டர்கள் கைது
தி.மு.க. ஒட்டிய முட்டை போஸ்டர் கிழித்த பா.ஜ. தொண்டர்கள் கைது
தி.மு.க. ஒட்டிய முட்டை போஸ்டர் கிழித்த பா.ஜ. தொண்டர்கள் கைது
ADDED : பிப் 06, 2026 05:02 AM
கோவை: மத்திய அரசு பட்ஜெட்டை விமர்சித்து தி.மு.க.வினர் ஒட்டிய போஸ்டரை கிழித்த பா.ஜ., வினர் கைது செய்யப்பட்டனர்.மத்திய அரசு தாக்கல் செய்த 2026 பட்ஜெட்டில் தமிழகத்திற்குப் போதிய நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி, தி.மு.க வினர் கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்
.அதில் பா.ஜ.க - அ.தி.மு.க ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு ஒதுக்கிய நிதி 'முட்டை' என்றும், 'பட்ஜெட் - 2026 - ஒரு பூஜ்ஜியம்' என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை, கணபதி மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் இப்போஸ்டர்கள் ஒட்டப்பட்டன.இப்போஸ்டர்கள் மத்திய அரசை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாக, பா.ஜ., இளைஞர் அணி சிங்காநல்லுார் பகுதி துணை தலைவர் லைஜு தலைமையில் போஸ்டர்களைக் கிழித்தனர்.இதையடுத்து போஸ்டர்களை கிழித்ததாக இளைஞர் அணியை சேர்ந்த, 15 பேரை போலீசார் கைது செய்தனர்.

