/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்களால் சாக்கடை கால்வாய் அடைப்பு 60வது வார்டில் ஏன் இந்த அட்டூழியம்
/
கற்களால் சாக்கடை கால்வாய் அடைப்பு 60வது வார்டில் ஏன் இந்த அட்டூழியம்
கற்களால் சாக்கடை கால்வாய் அடைப்பு 60வது வார்டில் ஏன் இந்த அட்டூழியம்
கற்களால் சாக்கடை கால்வாய் அடைப்பு 60வது வார்டில் ஏன் இந்த அட்டூழியம்
UPDATED : ஜன 12, 2026 06:00 AM
ADDED : ஜன 12, 2026 05:57 AM

சிதறிக்கிடக்கும் குப்பை
கணபதி, ராமகிருஷ்ணபுரம், 20வது வார்டு, சாலையோரத்தில் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. திறந்தவெளியில் சிலர் குப்பையை தொடர்ந்து இப்பகுதியில் வீசிச்செல்கின்றனர். பாதி சாலை வரை சிதறிக்கிடக்கும் குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.
- சந்திரா:
சாக்கடையில் கருங்கற்கள் உப்பிலிபாளையம், 60வது வார்டு, மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் சிலர் பெரிய கருங்கற்களை கொட்டியுள்ளனர். இதனால் கழிவுநீர் அடைத்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- சித்தார்த்:
காலை, மாலை நெருக்கடி
மரப்பாலம் பாலம் வேலை நடைபெறுவதால், பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பாலக்காடு சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதுக்கரை ரோடு வழியாக செல்கின்றன. தினமும் காலை, மாலை வேளையிலும் கடும் போக்குவரத்துநெருக்கடி ஏற்படுகிறது.
- கார்த்திக்:
விளையாட்டு உபகரணங்கள் சேதம்
வீரகேரளம், பூசாரிபாளையம், காந்திபார்க்கில் இருந்து வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. பூங்காவில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகளும் எரியாமல் உள்ளது.
- பாரத்:
கடும் துர்நாற்றம்
துடியலுார், ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள ராஜ வாய்க்காலில், தொடர்ந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
- ஸ்ரீதர்:
சறுக்கும் மணல் சுந்தராபுரம், மதுக்கரை ரோட்டில் சமீபத்தில் பெய்த மழையில் சாலையோரம் அதிகளவு மணல் குவிந்துள்ளது. இருசக்கர வாகனஓட்டிகள் சாலையோரம் செல்லும்போது சறுக்கி விழுகின்றனர். குவிந்துள்ள மணலை அகற்ற வேண்டும்.
- தங்கவேல்:
குப்பை மேடான பேருந்துநிலையம்
ஒண்டிப்புதுார், எஸ்.எம்.எஸ்.லே-அவுட் பகுதியில் பேருந்து நிலையம் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை. பேருந்து நிலைய வளாகம் முழுவதும் ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது. குப்பையை அகற்ற வேண்டும்.
- பழனிச்சாமி:
சாக்கடையில் மின்கம்பம்
தொண்டாமுத்துார் ரோடு, பூசாரிபாளையம், 74வது வார்டில் சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம் உள்ளது. கழிவுநீர் செல்லும்போது அரித்து கம்பத்தின் அடிப்பகுதி சேதமடையக்கூடும். சாக்கடை கால்வாயில் நடுவே ஆபத்தான முறையில் அமைந்துள்ள மின்கம்பங்களை இடமாற்ற வேண்டும்.
- ராபர்ட்:
இருக்கை இல்லை
செல்வபுரம் மற்றும் செட்டிவீதியில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பயணிகள் உட்கார வசதியாக பேருந்து நிலையத்தில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. பயணிகள் நின்றபடியே காத்திருக்க வேண்டியுள்ளது.
- பாலமுருகன்:
வளைவில் ஆபத்து மத்திய மண்டலம், 83வது வார்டு, பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில், ஜி.டி.பள்ளி திருப்பம் அருகே சாக்கடை சிலேப் பெயர்ந்துள்ளது. குழந்தைகள் உட்பட இவ்வழியே நடந்து செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. வாகனஓட்டிகளுக்கும் ஆபத்தாக உள்ளது.
- உதயகுமார்:

