/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குருதி கொடையாளர்களுக்கு போத்தீஸ் கவுரவம்
/
குருதி கொடையாளர்களுக்கு போத்தீஸ் கவுரவம்
ADDED : ஜூன் 19, 2025 05:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை மாநகரில் முன்னணி ஜவுளி நிறுவனமான போத்தீஸ், பொதுமக்களுக்கு மரக்கன்று வழங்குதல், புத்தகங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளை தொடர்ந்து செய்து வருகிறது.
அந்த வகையில், உலக ரத்த கொடையார்கள் தினத்தை முன்னிட்டு, உதிரம் தந்து உயிர் காக்கும் கோவையைச் சேர்ந்த குருதிக்கொடையாளர்களுக்கு, பாராட்டு விழா நடந்தது. பல்வேறு தொண்டு நிறுவனங்களை சேர்ந்த குருதிக்கொடையாளர்கள் கலந்து கொண்டனர்.
போத்தீஸின் நிர்வாக இயக்குனர் அசோக், மேற்கு மண்டல துணைத்தலைவர் சக்தி ஆகியோர் குறுதிக்கொடையாளர்களை வாழ்த்தினர். நினைவுப்பரிசு வழங்கி கவுரவித்தனர்.