ADDED : ஆக 12, 2025 08:06 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை எதிரில் எல்.எஸ்.புரம் பகுதிக்கு செல்லும் சாலையில் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனைக்கு எதிர்ப்புறம் உள்ள புதரில் இருந்து துர்நாற்றம் வீசியது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் வந்து பார்த்த போது புதரில் பெண் சிசு சடலமாக கிடப்பது தெரியவந்தது.
சடலத்தை மேட்டுப்பாளையம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.