/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீரை காய்ச்சி குடியுங்க: சுகாதாரத்துறை அறிவுரை
/
குடிநீரை காய்ச்சி குடியுங்க: சுகாதாரத்துறை அறிவுரை
குடிநீரை காய்ச்சி குடியுங்க: சுகாதாரத்துறை அறிவுரை
குடிநீரை காய்ச்சி குடியுங்க: சுகாதாரத்துறை அறிவுரை
ADDED : ஜூலை 28, 2025 09:08 PM
வால்பாறை; பருவமழை தீவீரமடைந்துள்ள நிலையில், பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தீவிரமாக பெய்கிறது. தொடர் மழையால் இங்குள்ள, ஆறு மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
வால்பாறையில் சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு, கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் சளி, காய்ச்சல், இருமலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: வால்பாறையில், பருவமழை தொடர்ந்து பெய்வதால், பனிப்பொழிவும், கடுங்குளிரும் நிலவுகிறது. இதனால், மக்கள் பாதுகாப்பாக வெளியில் செல்ல வேண்டும். காய்ச்சல் பாதிப்பு இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும்.
தன்னிச்சையாக மருந்துக்கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்ளக்கூடாது. சீதோஷ்ணநிலை மாற்றத்தால், வைரஸ் காய்ச்சல் பரவாமல் தடுக்கும் வகையில், குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். கடுங்குளிர் நிலவுவதால் பாதுகாப்பான உடைகளை அணிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.

