sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மீண்டும் குண்டு மிரட்டல்; கோவை போலீசார் அதிர்ச்சி

/

மீண்டும் குண்டு மிரட்டல்; கோவை போலீசார் அதிர்ச்சி

மீண்டும் குண்டு மிரட்டல்; கோவை போலீசார் அதிர்ச்சி

மீண்டும் குண்டு மிரட்டல்; கோவை போலீசார் அதிர்ச்சி


ADDED : செப் 27, 2025 12:47 AM

Google News

ADDED : செப் 27, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை கலெக்டர் அலுவலகத்துக்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, கடந்த மாதம் 26ம் தேதி, இ-மெயில் வாயிலாக மிரட்டல் விடுக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய் சோதனை நடத்திய போது, புரளி என்பது தெரியவந்தது. அதன் பின், தொடர்ந்து பல்வேறு நாட்களில், ஐந்து முறை இ-மெயிலில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

கோவை மாநகர சைபர் கிரைம் பிரிவில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, வழக்கு பதிவு செய்தனர். ஆனால், மிரட்டல் விடுத்த நபர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஏழாவது முறையாக நேற்றும், கோவை கலெக்டர் ஆபிசுக்கு இ-மெயில் வாயிலாக, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

மோப்பநாய் உதவியுடன், போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இதேபோல், பீளமேட்டில் உள்ள தனியார் கல்லுாரிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

இரண்டு இடங்களில் சோதனை நடத்தியும், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. தொடர்ச்சியாக மிரட்டல் விடுக்கும் நபர்களை கண்டுபிடிக்க, போலீசார் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us