ADDED : ஜூலை 09, 2025 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவையில், வெள்ளலுார் மாரியப்பன் எழுதிய, 'சமயத்திற்கான சமயம்' என்ற நுால் வெளியீட்டு விழா நடந்தது.
பயனீர் கல்லுாரி முதல்வர் முருகேசன் தலைமை வகித்தார். நுாலை கவிஞர் கோவை கிருஷ்ணா வெளியிட, சிபி ஐ.ஏ.எஸ்., அகடாமி நிறுவனர் அரங்க கோபால் பெற்றுக்கொண்டார்.
கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் மணிமேகலை நுால் குறித்து கருத்துரையும், கவிஞர் கோட்டீஸ்வரன் வாழ்த்துரையும் வழங்கினர். நுாலாசிரியர் மாரியப்பன் ஏற்புரையாற்றினார்.கவிஞர்கள், படைப்பாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.