ADDED : ஆக 27, 2026 06:21 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டார கோவில்கள் பூணூல் மாற்றும் விழா நடந்தது.
ஹிந்துக்களின் முக்கிய பண்டிகையான ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி ஸ்ரீ சங்கர விநாயகர் பஜனை மடம், ஆனைமலை ஈஸ்வரன் கோவிலில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் பூணூல் மாற்றும் விழா நடந்தது.
இதில், பூணூல் மாற்றுவதற்கான மந்திரங்கள் முழங்கி, யாகங்கள் நடந்தது. தொடர்ந்து உலக நலன், சமுதாய முன்னேற்றம், குடும்ப வளர்ச்சி, உள்ளிட்டவைகளுக்கான பிரார்த்தனை செய்து, பிராமணர்கள், வைஸ்சியாள் உள்ளிட்ட சமூகத்தினர் பழைய பூணூலை அகற்றி புதிய பூணூல் அணிந்து கொண்டனர்.
