/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மஞ்சளாக வந்த போர்வெல் தண்ணீர்
/
மஞ்சளாக வந்த போர்வெல் தண்ணீர்
ADDED : மார் 04, 2026 05:17 AM
கோவை: வெள்ளலுாரில் குப்பை கிடங்கு உள்ளது. மலைக்குன்றுகளாக கொட்டி இருப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கிறது. நிலத்தடி நீர் பாழ்பட்டு உள்ளது. அப்பகுதி மக்கள் பலமுறை புகார் கூறியிருக்கின்றனர்.
குப்பை கழிவு நீர் நிலத்துக்குள் இறங்குவதால் போர்வெல் தண்ணீரின் நிறம் மஞ்சளாக மாறி இருக்கிறது. அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.
சமீபத்தில் ஆய்வுக்கு வந்திருந்த மத்திய மாசு கட்டுப்பாடு வாரிய குழுவினர், குப்பை கிடங்கை சுற்றி 1.5 கி.மீ. பரப்புக்கு நிலத்தடி நீர் மாதிரியை சேகரித்துச் சென்றனர்.
அதன் தன்மையை ஆய்வு செய்து, தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருக்கின்றனர்.
ஸ்ரீராம் நகர் பகுதியில் போர்வெல் தண்ணீர் மஞ்சள் நிறமாக வந்ததாக அப்பகுதியினர் புகார் கூறினர். அதனால், மாநகராட்சியில் இருந்து மாதிரி சேகரிக்கப்பட்டு, பகுப்பாய்வுக்கு நேற்று அனுப்பப்பட்டது.

