sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திறந்தவெளி கழிப்பிடம்; பேரூராட்சி எச்சரிக்கை

/

திறந்தவெளி கழிப்பிடம்; பேரூராட்சி எச்சரிக்கை

திறந்தவெளி கழிப்பிடம்; பேரூராட்சி எச்சரிக்கை

திறந்தவெளி கழிப்பிடம்; பேரூராட்சி எச்சரிக்கை


ADDED : டிச 24, 2024 06:58 AM

Google News

ADDED : டிச 24, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு, பொதுமக்கள் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தக் கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தினால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, பொதுமக்கள், பொது கழிப்பிடத்தையோ அல்லது தனிநபர் கழிப்பிடத்தையோ பயன்படுத்த வேண்டும். இதை பயன்படுத்தாமல் திறந்தவெளி பகுதிகளை கழிப்பிடமாக பயன்படுத்தி, சிறுநீர் கழித்தால், 100 ரூபாயும், மலம் கழித்தால், 200 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும்.

இது தொடர்பாக ஒவ்வொரு வார்டும் கண்காணிக்கப்பட்டு வருகிறது என, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us