ADDED : ஆக 03, 2025 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, லட்சுமிநகரை சேர்த்தவர் சதீஷ்குமார், 41, பால் வியாபாரி. இவருக்கு தீபக்ராஜ், 19 மற்றும் யஷ்வந்த், 14 என இரு மகன்கள் உள்ளனர். கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில், யஷ்வந்த் 9ம் வகுப்பு படித்து வந்தார்.
வீட்டின் அருகில் உள்ள டியூசனுக்கு கடந்த இரு நாட்களுக்கு முன் சென்றார். இடைவெளி நேரத்தில் டியூசனை விட்டு வெளியே சென்ற போது, இவரை பாம்பு கடித்துள்ளது. உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். கிணத்துக்கடவு போலீசார் விசாரிக்கின்றனர்.