/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லஞ்சம் வாங்கிய அதிகாரி ஜாமின் மனு நாளை விசாரணை
/
லஞ்சம் வாங்கிய அதிகாரி ஜாமின் மனு நாளை விசாரணை
ADDED : ஜூலை 29, 2025 08:41 PM
கோவை; லஞ்சம் வாங்கிய ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரி, ஜாமினில் விடுவிக்க கோரிய மனு, நாளை விசாரணைக்கு வருகிறது.
சூலுார் அருகே பாப்பம்பட்டியில், வீராத்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலை ஹிந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர கோரி, நிர்வாகத்தினர் விண்ணப்பித்தனர்.
இதற்கு கோவை, பாலசுந்தரம் ரோட்டிலுள்ள ஹிந்து சமய அறநிலைய துறை அதிகாரி இந்திரா,54, லஞ்சம் கேட்டார். லஞ்ச பணம், 1.50 லட்சம் ரூபாயை வாங்கும் போது, கடந்த 17ம் தேதி கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டார்.
ஜாமினில் விடுவிக்க கோரி, மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய் தார்.
இந்த மனு மீது அரசு தரப்பு பதில் மனு தாக்கல் செய்ய, நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.