/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொத்த மல்லி ஏலம் துவக்கம் கிலோ ரூ.97.50க்கு விற்பனை
/
கொத்த மல்லி ஏலம் துவக்கம் கிலோ ரூ.97.50க்கு விற்பனை
கொத்த மல்லி ஏலம் துவக்கம் கிலோ ரூ.97.50க்கு விற்பனை
கொத்த மல்லி ஏலம் துவக்கம் கிலோ ரூ.97.50க்கு விற்பனை
ADDED : ஜன 31, 2024 11:16 PM

உடுமலை- உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், மல்லி ஏலம் துவங்கியது.
உடுமலை சுற்றுப்பகுதிகளில், கொத்தமல்லி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அறுவடை துவங்கியுள்ள நிலையில், உடுமலை ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு நேற்று ஏலத்திற்கு வந்தது.
3 விவசாயிகள், 1,772 கிலோ மல்லி விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். ஒரு கிலோ, ரூ.94.35 முதல், அதிகபட்சமாக, ரூ.97.50க்கு விற்பனையானது.
உடுமலை வட்டார விவசாயிகள், தாங்கள் அறுவடை செய்யும் விளை பொருட்களை, ஒழுங்கு முறை விற்பனை கூடத்திலுள்ள உலர் களத்தில் காய வைத்து, இ - நாம் திட்டத்தின் கீழ், அதிகப்பட்ச விலைக்கு விற்பனை செய்து பயன்பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு, 94439 62834 தொடர்பு கொள்ளலாம், என ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.