sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விபத்தில் கால் முறிந்த நபருக்கு  இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி 

/

விபத்தில் கால் முறிந்த நபருக்கு  இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி 

விபத்தில் கால் முறிந்த நபருக்கு  இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி 

விபத்தில் கால் முறிந்த நபருக்கு  இழப்பீடு தராததால் பஸ் ஜப்தி 


ADDED : அக் 16, 2024 10:13 PM

Google News

ADDED : அக் 16, 2024 10:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: விபத்தில் கால் முறிந்த நபருக்கு, இழப்பீடு வழங்க தாமதித்ததால், அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

கோவை, ஒண்டிப்புதுாரை சேர்ந்தவர் பழனிச்சாமி,48. 2016, ஜூலை 2ல் சத்தி ரோடு, குரும்பபாளையம் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த அரசு பஸ் பழனிச்சாமி மீது, மோதியதில் கால் முறிவு ஏற்பட்டது.

மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அரசு போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்க கோரி, கோவை எம்.சி.ஓ.பி., கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த நீதிமன்றம், 16.48 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. ஆனால், 10 லட்சம் ரூபாய் செலுத்தி விட்டு, மீதி தொகை தராமல், அரசு போக்குவரத்துக் கழகம் இழுத்தடிப்பு செய்தது. அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி, கோவை - மேட்டுப்பாளையம் செல்ல காந்திபுரத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசு பஸ், நேற்று ஜப்தி செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us