sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 அரசு போக்குவரத்து டிரைவருக்கு உதவித்தொகை தராததால் பஸ் ஜப்தி

/

 அரசு போக்குவரத்து டிரைவருக்கு உதவித்தொகை தராததால் பஸ் ஜப்தி

 அரசு போக்குவரத்து டிரைவருக்கு உதவித்தொகை தராததால் பஸ் ஜப்தி

 அரசு போக்குவரத்து டிரைவருக்கு உதவித்தொகை தராததால் பஸ் ஜப்தி


ADDED : நவ 22, 2025 07:15 AM

Google News

ADDED : நவ 22, 2025 07:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பொள்ளாச்சி அருகேயுள்ள வேட்டைகாரன்புதுாரை சேர்ந்தவர் துரைசாமி. மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றினார்.

2021, மே 5ல், சின்னியம்பாளையம் பிரிவு, நடுப்பட்டி அருகே பஸ்சை ஓட்டி சென்ற போது, பைக் மீது மோதி விபத்துள்ளானது. பைக்கில் வந்த நபர் உயிரிழந்தார். துரைசாமி பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து, இடைநீக்க உத்தரவு ரத்து செய்யபட்டது.

இடைநீக்கம் செய்யப்பட்ட, 105 நாட்களுக்கு வாழ்வாதார உதவி தொகை வழங்க கோரி, அரசு போக்குவரத்து கழகத்திற்கு விண்ணப்பித்தார். 75 நாட்களுக்கு மட்டுமே உதவி தொகை வழங்கப்பட்டது.

நிலுவை வாழ்வாதார தொகை 32,157 ரூபாய் வழங்க உத்தரவிடக்கோரி, கோவை கூடுதல் லேபர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

கோர்ட் உத்தரவிட்டும் நிலுவை தொகை வழங்க தவறியதால், அதே கோர்ட்டில் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன்பேரில், கோவை ரயில்வே ஸ்டேஷன் அருகில் நிறுத்தப்பட்டிருந்த (தடம் எண்:11 )அரசு பஸ் நேற்று ஜப்தி செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us