sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பயன்பாட்டு காலம் முடிந்தும் பஸ்கள் இயக்கம்: டிரைவர், கண்டக்டர்கள் அருதிப்தி

/

பயன்பாட்டு காலம் முடிந்தும் பஸ்கள் இயக்கம்: டிரைவர், கண்டக்டர்கள் அருதிப்தி

பயன்பாட்டு காலம் முடிந்தும் பஸ்கள் இயக்கம்: டிரைவர், கண்டக்டர்கள் அருதிப்தி

பயன்பாட்டு காலம் முடிந்தும் பஸ்கள் இயக்கம்: டிரைவர், கண்டக்டர்கள் அருதிப்தி


ADDED : ஏப் 29, 2025 09:13 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 09:13 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி; அரசு பஸ்களின் பயன்பாட்டுக் காலம் அதிகரிப்பு, மெக்கானிக் பற்றாக்குறை போன்ற காரணங்களால், பணியில் இருக்கும் டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் தொய்வு அடைகின்றனர்.

அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சியில் உள்ள மூன்று பணிமனைகளில் இருந்து, 200க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு, தொழிலாளர் நலன், வருவாயைப் பெருக்குவது, விபத்துகளை குறைப்பது, நவீனமயமாக்கம் போன்ற இலக்குகளை மையமாகக் கொண்டு, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

இருப்பினும், சமீபகாலமாக, பழுதான நிலையில் பஸ்கள் இயக்கப்படுவதாக டிரைவர், கண்டக்டர்களின் முறையீடுகள் அதிகம் காணப்படுகின்றன. பல அரசு பஸ்கள், நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருப்பதால், சீராக இயக்க முடியாமல் சிரமம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது குறித்து, டிரைவர், கண்டக்டர்கள் கூறியதாவது:

அரசு பஸ்கள், 5 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கி.மீ., பயணிக்கலாம் என மோட்டார் வாகனச் சட்டம் 1988ல், உள்ளது. விதிமீறல்கள் இருப்பினும், மிக பழைய பஸ்களை, ஓரங்ககட்ட இந்த வரம்பு ஓரளவுக்கு உதவியது.

இந்நிலையில், போக்குவரத்து கழக பஸ்களின், பயன்பாட்டு காலத்தை அதிகரித்து, கடந்த, 2021ல், அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, விரைவு பஸ்கள், 7 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ., பயணிக்கலாம் எனவும், மற்ற அரசு பஸ்கள், 9 ஆண்டுகள் அல்லது 12 லட்சம் கி.மீ., பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

இதனால், புதிதாக பஸ்கள் கொள்முதல் செய்வதில் காலம் தாழ்த்தப்படும். அதேபோல, பணிமனைகளில், பஸ்களை முறையாக பராமரிக்கத் தேவையான தொழிலாளர்கள் எண்ணிக்கையிலும், குறிப்பிட்ட விகிதம் பின்பற்றப்படுகிறது.

அதன்படி ஒரு பஸ்சை இயக்க, 2 டிரைவர்கள், 2 கண்டக்டர்கள் தேவை. மேலும், 60 மெக்கானிக்குகள் இருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை நடைமுறையில் இல்லை. 50 சதவீத அளவில் மட்டுமே மெக்கானிக்குகள் உள்ளனர். இதனால், பழுதான பஸ்சை சீரமைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. நீண்ட கால பயன்பாட்டில் உள்ள பஸ்களை இயக்குவதிலும் சிக்கல் நிலவுகிறது.

இவ்வாறு, கூறினர்.






      Dinamalar
      Follow us