sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

சிறுத்தையை பிடிக்க கூண்டை இடமாற்ற திட்டம்

/

சிறுத்தையை பிடிக்க கூண்டை இடமாற்ற திட்டம்

சிறுத்தையை பிடிக்க கூண்டை இடமாற்ற திட்டம்

சிறுத்தையை பிடிக்க கூண்டை இடமாற்ற திட்டம்


ADDED : மார் 01, 2024 10:25 PM

Google News

ADDED : மார் 01, 2024 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்;வெள்ளிப்பாளையத்தில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட்டுள்ளது. 2 நாட்கள் கழித்து வேறு இடத்திற்கு கூண்டை மாற்ற வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மேட்டுப்பாளையம் அடுத்த வெள்ளிப்பாளையம் அருகில் சென்னாமலை கரட்டில் கடந்த சில நாட்களுக்கு முன், கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கி கொன்றது.

இதையடுத்து, அப்பகுதியில் சிறுத்தையை பிடிக்க சிறுமுகை வனத்துறை சார்பில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. 2 நாட்களுக்குள் சிறுத்தை சிக்கவில்லை என்றால் வெவ்வேறு இடங்களில் கூண்டை மாற்றி வைத்து, சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். அத்துடன் பல்வேறு இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிறுமுகை வனச்சரகர் மனோஜ் கூறுகையில், ''சிறுத்தைக்கு வைக்கப்பட்டுள்ள கூண்டில் 2 நாட்களுக்குள் சிறுத்தை சிக்கவில்லை என்றால், கூண்டை வேறு இடத்தில் மாற்றி வைப்போம்.

ஒரே இடத்தில் சிறுத்தை சுற்றி திரியாது. வெள்ளிப்பாளையத்தை சுற்றி பல இடங்களில் கேமராக்கள் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us