ADDED : அக் 15, 2025 11:38 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை நகரில் ரமேஷ் என்பவர் மாடுகளை வளர்க்கிறார். இவர், மூன்று வயது கன்றுக்குட்டியை மேய்ச்சலுக்காக விட்டுள்ளார். நீண்ட நேரமாகியும் கன்றுக்குட்டி வீடு திரும்பாததால், தேயிலை காட்டில் தேடியுள்ளார்.
அப்போது, வால்பாறை அடுத்துள்ள சோலையாறு முதல் டிவிஷன் தேயிலை காட்டில் சிறுத்தை தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.
