/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
/
கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஆக 25, 2025 09:51 PM
கோவை; பட்டியலிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் அறிக்கை:
ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.ஐ.டி, - என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலையில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த, குடும்ப ஆண்டு வருவாய் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ள மாணவர்களுக்கு, கல்வி உதவித் தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் மற்றும் இதர கட்டாய கட்டணங்களுக்காக மாணவர் செலுத்திய தொகை அல்லது ஆண்டுக்கு அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பிக்க விரும்புவோர், பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், சென்னை--5, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் நல இயக்கம் சென்னை--5 அல்லது, கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm# scholarshipschemes என்ற இணையதள முகவரியில், விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.