ADDED : மார் 16, 2024 11:50 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னூர்:அன்னூரில் இன்று நடைபெற உள்ள, ரத்த தான முகாமில் பங்கேற்க, சங்க நிர்வாகிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
அன்னூரில், இன்று காலை 10:00 மணிக்கு, ரத்ததான முகாம் மற்றும் இலவச பொது மருத்துவ முகாம் தாசபளஞ்சிக திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இந்த முகாமில், 18 வயது முதல் 55 வயது வரை உள்ள, ஆரோக்கியமான இருபாலரும் ரத்ததானம் செய்யலாம். ரத்த தானம் செய்வதால், உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. 48 மணி நேரத்தில், ரத்தம் மீண்டும் ஊறி விடும்.
சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகளும், இலவசமாக செய்யப்படுகிறது. முகாமில் பங்கேற்று ரத்ததானம் செய்து, இலவச பொது மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளலாம் என, தென்னிந்திய தாசபளஞ்சிக மாதர் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

