/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி வரி வசூலிக்க 12 இடங்களில் இன்று முகாம்
/
மாநகராட்சி வரி வசூலிக்க 12 இடங்களில் இன்று முகாம்
மாநகராட்சி வரி வசூலிக்க 12 இடங்களில் இன்று முகாம்
மாநகராட்சி வரி வசூலிக்க 12 இடங்களில் இன்று முகாம்
ADDED : ஜன 31, 2026 06:51 AM
கோவை: கோவை மாநகராட்சி இன்று 12 இடங்களில் வரி வசூல் சிறப்பு முகாம் நடத்துகிறது.
5வது வார்டு விசுவாசபுரம், 58வது வார்டு பூர்வாங்கரா அபார்ட்மென்ட், 55வது வார்டு எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, 34வது வார்டு கவுண்டம்பாளையம் மஞ்ஜேஸ்வரி காலனி விநாயகர் கோயில், 39வது வார்டு வடவள்ளி டாடா நகர் ஸ்ரவ்யா அபார்ட்மென்ட், 15வது வார்டு சுப்ரமணியம்பாளையம் வார்டு அலுவலகம் அருகில்.
19வது வார்டு மணிகாரம்பாளையம் அம்மா உணவகம், 25வது வார்டு செல்வவிநாயகர் கோயில் லைன் காந்தி மாநகர் வார்டு அலுவலகம், 28வது வார்டு ஆவராம்பாளையம், 79வது வார்டு கிரீன் பார்க் அபார்மென்ட், 32வது வார்டு சங்கனுார் நாராயணசாமி வீதி சிறுவர் பூங்கா, 63வது வார்டு ராமநாதபுரம் பெருமாள் கோயில் வீதி மாநகராட்சி வணிக வளாகம் ஆகிய இடங்களில் இன்று (சனி) காலை 9 முதல் மாலை 5 மணி வரை சிறப்பு முகாம் நடைபெறும்.
மாநகராட்சி வரி வசூல் மையங்களிலும் செலுத்தலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

