/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இட ஒதுக்கீட்டில் வேலை கிடைக்குமா?
/
இட ஒதுக்கீட்டில் வேலை கிடைக்குமா?
ADDED : ஜூலை 06, 2025 11:17 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவில் உள்ள பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீட்டில் வேலை வழங்க வேண்டும் என, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு, இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வழங்க வேண்டும் என, தமிழ்நாடு பழங்குடியினர் ஹிந்து காட்டுநாயக்கர் நல சங்கம் சார்பில், கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
மனுவில், காட்டுநாயக்கர் சமூகத்தை சேர்ந்த பழங்குடியினர் பலர், 10ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ளனர். இதில், 50க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைக்காக பதிவு செய்துள்ளனர்.
ஆனால், தற்போது வரை இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசு விதிகளின் படி வழங்கப்படவில்லை. எனவே, பழங்குடியின மக்கள் நலன் கருதி, இட ஒதுக்கீட்டில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.