sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு பட்டா கிடைக்குமா?

/

நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு பட்டா கிடைக்குமா?

நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு பட்டா கிடைக்குமா?

நிலத்தை ஆக்கிரமித்தவருக்கு பட்டா கிடைக்குமா?


ADDED : பிப் 17, 2024 02:20 AM

Google News

ADDED : பிப் 17, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அ ரசு துறைகள் பயன் படுத்தாத நிலத்தை, ஆக்கிரமித்து வசித்து வருவோருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதே போன்று நத்தம் புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கும் பட்டா வழங்கப்படுகிறது.

பட்டா என்பது, நிலத்தின் உரிமையை சுட்டிக் காட்டும் ஆவணம். இந்த ஆவணத்தை வருவாய் துறை வழங்குகிறது. தமிழகத்தில், பட்டா வாங்குவது மற்றும் மாற்றத்துக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பிக்க வழி செய்யப்பட்டிருக்கிறது.

இதில், யாரும் உரிமை கோராத நிலங்களை, மக்கள் தங்கள் நிலையில் அதை புறம்போக்கு நிலமாக கருதி ஆக்கிரமிக்கின்றனர். இத்தகைய ஆக்கிரமிப்புகளுக்கு பட்டா கோரும்போது, சிக்கல்கள் எழுகின்றன.

அரசு துறைகளுக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா கோருவது போன்று, தனியார் நிலங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா கோருவது எளிதல்ல. இதற்கும் பல கட்டுப்பாடுகள் உள்ளன.

தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ள நிலத்தை, அவர் தலையீடு இன்றி, வேறு ஒருவர் தொடர்ந்து, 12 ஆண்டுகள் பயன்படுத்தி வரும் நிலையில், பட்டா கோரும் நிலை ஏற்படுகிறது.

இத்தகைய நிலத்தில் வசிப்பவர்கள், தொடர்ந்து, 12 ஆண்டுகள் அந்த நிலத்தை எவ்வித வாடகையும் செலுத்தாமல், பயன்படுத்தி வந்ததற்கான ஆதாரத்தை அளிக்க வேண்டும். இத்துடன், அந்த நிலத்துக்கான வரிகளை ஆக்கிரமிப்பாளர் செலுத்தி இருந்தால், அதற்கான ஆதாரங்களையும் அளிக்க வேண்டும்.

இத்தகைய சூழலில், வருவாய் ஆவணங்கள் அடிப்படையில், பட்டாதாரர் கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

அவர் தரப்பில் இருந்து, எவ்வித ஆட்சேபனையும் வராத நிலையில், ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இதில், உண்மையான பட்டாதாரர் காணாமல் போய் விட்டார், அவர் எங்கு, எப்படி இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா கோர முடியும்.

இந்நிலையில், உரிமையாளர் எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியவில்லை என்பதை தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்க வேண்டும். இது போன்ற சூழலில், அந்த நிலத்துக்கு சட்டபூர்வமாக பட்டாதாரர் உரிமை கோரவில்லை என்பதை, ஆதாரத்துடன் நிரூபித்தால் ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற முடியும்.

இச்சூழலில், பட்டாதாரர் தன் கருத்தை தெரிவிக்க, சட்ட ரீதியான வாய்ப்புகளை வருவாய் துறை அளிக்கும்.

இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி, அவர் ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில், ஆக்கிரமிப்பாளர்கள் பெயருக்கு பட்டா வழங்கப்படும்.

சில சமயங்களில் குறிப்பிட்ட நிலத்துக்கு, யாரும் உரிமை கோரவில்லை என்பதை நீதிமன்ற உத்தரவு வாயிலாக நிரூபித்தும், ஆக்கிரமிப்பாளர்கள் பட்டா பெற முயற்சிப்பர்.

எனவே, நிலம் வாங்கி வைத்துள்ளவர்கள், அதன் மீதான உரிமையை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம் என்கின்றனர், வருவாய் துறை அதிகாரிகள்.

அதற்கான அத்தாட்சி ஆவணங்களின் நகல்கள் இணைக்க வேண்டும் அவை, உள்ளாட்சி அமைப்புக்கு சொத்துவரி செலுத்திய ரசீது, மின் கட்டண அட்டை, குடிநீர் வடிகால் இணைப்பு அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை போன்ற சான்றுகளில் ஏதேனும் ஒன்றை இணைத்தால் போதுமானது.






      Dinamalar
      Follow us