/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்., சார்பில் நடந்த கேன்சர் சிகிச்சை கருத்தரங்கு
/
கே.எம்.சி.எச்., சார்பில் நடந்த கேன்சர் சிகிச்சை கருத்தரங்கு
கே.எம்.சி.எச்., சார்பில் நடந்த கேன்சர் சிகிச்சை கருத்தரங்கு
கே.எம்.சி.எச்., சார்பில் நடந்த கேன்சர் சிகிச்சை கருத்தரங்கு
ADDED : மே 04, 2025 10:40 PM

கோவை, ; கே.எம்.சி.எச்., சார்பில், 'நோய் எதிர்ப்பு சிகிச்சைக்கான எதிர்காலம், கேர் -டி மற்றும் பி.ஐ.டி.இ., சிகிச்சை முறைகள்' என்ற பெயரில் கருத்தரங்கு, அவிநாசி சாலையில் உள்ள ரெசிடென்சி டவர்சில் நடந்தது.
கோவை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைடீன் நிர்மலா உட்பட, முன்னணி மருத்துவர்கள், உயிர் மருத்துவ விஞ்ஞானிகள், ஆராய்ச்சி அறிஞர்கள், மருந்து நிபுணர்கள்பங்கேற்றனர்.
கேர் -டி மற்றும் பி.ஐ.டி.இ.,சிகிச்சைகளில் சமீபத்திய முன்னேற்றங்கள், நடந்து கொண்டிருக்கும் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் எதிர்கால போக்குகள் பற்றி விவாதித்தனர்.
கே.எம்.சி.எச்., தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா பழனிசாமி பேசுகையில், ''தமிழ்நாட்டில் அதிக கேர் - டிசிகிச்சைகள் செய்த ஒரே மருத்துவமனை,கே.எம்.சி.எச்., இந்த சிகிச்சைகள், புற்றுநோய் செல்களை எதிர்த்துப் போராடி, நோயாளியின் நோயெதிர்ப்பு செல்களை வலுப்படுத்துகின்றன. ரத்தம் சம்பந்தப்பட்ட புற்றுநோய்கள் மற்றும் திடமான கட்டிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றன,'' என்றார்.