sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா, சாராய ஊறல் பறிமுதல்

/

கஞ்சா, சாராய ஊறல் பறிமுதல்

கஞ்சா, சாராய ஊறல் பறிமுதல்

கஞ்சா, சாராய ஊறல் பறிமுதல்


ADDED : மே 01, 2025 11:47 PM

Google News

ADDED : மே 01, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; சூலுார் அருகே வீட்டில் சாராய ஊறல் மற்றும் கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை, போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சூலுார் அடுத்த குரும்பபாளையம் பகுதியில், சூலுார் எஸ்.ஐ., சிவக்குமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, கைப்பையுடன் சென்ற நபரை, நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 3 கிலோ கஞ்சா இருந்தது தெரிந்தது. விசாரணையில் அந்நபர், பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தை சேர்ந்த திலீப்குமார்,27 என்பதும், குரும்ப பாளையத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருவதும் தெரிந்தது. அந்நபர் தங்கியுள்ள அறைக்கு சென்று சோதனையிட்டதில், பின்புறத்தில், 70 லிட்டர் சாராய ஊறல் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

கஞ்சா மற்றும் ஊறலை பறிமுதல் செய்த போலீசார், திலீப்குமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us