ADDED : ஜூன் 29, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார்; சூலுார் அடுத்த செலக்கரச்சல் கிராமத்தில் சுல்தான்பேட்டை போலீசார், ரோந்து சென்றனர்.
அப்போது, சந்தேகத்துக்கு இடமான வகையில் சென்ற நபரை நிறுத்தி விசாரித்தனர். அந்நபர் பையை சோதனையிட்ட போது, 1 கிலோ, 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் ஈரோடு மாவட்டம் சூரியம் பாளையத்தை சேர்ந்த சுகந்த்,25 என்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சுகந்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.