/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கார் டிரைவருக்கு ஓட ஓட வெட்டு அண்ணன் சாவால் தம்பி வெறி
/
கார் டிரைவருக்கு ஓட ஓட வெட்டு அண்ணன் சாவால் தம்பி வெறி
கார் டிரைவருக்கு ஓட ஓட வெட்டு அண்ணன் சாவால் தம்பி வெறி
கார் டிரைவருக்கு ஓட ஓட வெட்டு அண்ணன் சாவால் தம்பி வெறி
ADDED : ஜன 19, 2025 12:56 AM
கோவை:கோவை, கணுவாய் அருகே உள்ள கே.என்.ஜி.புதுார், மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் அடைக்கலராஜ், 33; கார் டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த போது, கூரையை பிய்த்து ஏழு பேர் கொண்ட கும்பல் உள்ளே நுழைந்து, அடைக்கலராஜை அரிவாளால் வெட்டியது.
தப்பி ஓடிய அவரை துரத்திச் சென்று வெட்டினர். பின் தலையில் பலத்த காயமடைந்து மயங்கினார். அவர் இறந்ததாக கருதி கும்பல் தப்பியது.
அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். துடியலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
போலீசார் கூறியதாவது:
ஒன்பது மாதங்களுக்கு முன், கே.என்.ஜி.புதுார் பட்டத்தரசி அம்மன் கோவில் விழாவில், அடைக்கலராஜ், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினர் கவுதம், 21, அவரது அண்ணன் பிரான்சிஸ் இடையே மதுபோதையில் தகராறு ஏற்பட்டது.
பிரான்சிஸ் தொண்டாமுத்துாருக்கு குடும்பத்துடன் குடிபெயர்ந்தார். சில தினங்களுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக, அவரது மனைவி, குழந்தையுடன் பிரிந்து சென்றார்.
மனமுடைந்த அவர், 15ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்தார். அவரது இறுதி சடங்கிற்கு, அடைக்கலராஜியின் தாய் சுமதி சென்றார். அண்ணன் தற்கொலைக்கு அடைக்கலராஜ் தான் காரணம் எனக்கூறி, சுமதியிடம் பிரான்சிஸ் தம்பி கவுதம் தகராறு செய்தார்.
அடைக்கலராஜிடமும் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் தான், கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டிஉள்ளார்.
இவ்வாறு, அவர் கூறினார்.
கவுதம், அவரது கூட்டாளிகள், கே.என்.ஜி.புதுாரை சேர்ந்த சந்துரு, மலையடிபாளையத்தை சேர்ந்த பிரபாகரன், 19, சந்தோஷ், லோகேஷ் உள்ளிட்ட ஏழு பேர் மீது ஏழு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்தனர். பிரபாகரனை சிறையில் அடைத்தனர். தப்பிய கவுதம் உள்ளிட்ட ஆறு பேரை தேடி வருகின்றனர்.

