sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பஸ் மீது மோதிய கார்; 'போதை' அதிகாரிக்கு அபராதம்

/

அரசு பஸ் மீது மோதிய கார்; 'போதை' அதிகாரிக்கு அபராதம்

அரசு பஸ் மீது மோதிய கார்; 'போதை' அதிகாரிக்கு அபராதம்

அரசு பஸ் மீது மோதிய கார்; 'போதை' அதிகாரிக்கு அபராதம்


ADDED : ஜூன் 15, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசியில் நின்றுகொண்டிருந்த அரசு பஸ் மீது கார் மோதியது. காரில் போதையில் வந்த நில அளவை துறை சார் ஆய்வாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை, உப்பிலிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் பரத்குமார், 38; கோவை மாவட்டத்தில், நில அளவை(சர்வே) துறையில் சார் ஆய்வாளராக பணிபுரிகிறார். நேற்று கோவையில் இருந்து காரில், திருப்பூரில் உள்ள நண்பரை பார்க்க வந்துகொண்டிருந்தார்.

கோவையிலிருந்து ஈரோடுக்கு புறப்பட்ட அரசு பஸ், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில் பயணிகளை ஏற்றுவதற்காக நிறுத்தப்பட்டது. பஸ்சின் பின்புறம் பரத்குமார் வந்த கார் பலமாக மோதியது. காரின் இடதுபுறம் மற்றும் பஸ்சின் பின்புறம் பலத்த சேதமடைந்தது.

அவிநாசி போலீசார் விசாரித்த போது பரத் குமார், அதிக போதையில் இருந்தது தெரிய வந்தது. அவிநாசி அரசு மருத்துவமனையில் அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. போதையில் வாகனத்தை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக பரத்குமாருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us