sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கேரளாவில் கார் மோதி மூதாட்டி பலி ;ஓராண்டுக்கு பின் கார் உரிமையாளர் கோவையில் கைது

/

கேரளாவில் கார் மோதி மூதாட்டி பலி ;ஓராண்டுக்கு பின் கார் உரிமையாளர் கோவையில் கைது

கேரளாவில் கார் மோதி மூதாட்டி பலி ;ஓராண்டுக்கு பின் கார் உரிமையாளர் கோவையில் கைது

கேரளாவில் கார் மோதி மூதாட்டி பலி ;ஓராண்டுக்கு பின் கார் உரிமையாளர் கோவையில் கைது

1


ADDED : பிப் 10, 2025 10:58 PM

Google News

ADDED : பிப் 10, 2025 10:58 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கேரளாவில் கார் மோதி மூதாட்டி உயிரிழந்த வழக்கில் ஓராண்டுக்கு பின் கோவை விமான நிலையத்தில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

கேரளா மாநிலத்தில் கடந்தாண்டு பிப்., 17ம் தேதி வடகரா, சரோத் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்த, பேபி என்ற மூதாட்டி, அவரது பேத்தி த்ரிஷனா மீது கார் மோதியது. படுகாயமடைந்த பேபி உயிரிழந்தார். அவரது பேத்தி த்ரிஷனா கோமா நிலையில் இருந்து தற்போது வரை மீளவில்லை.

விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்றது. இதையடுத்து கேரளா போலீசார் கார் டிரைவரை, பிடிக்க தீவிரமாக தேடி வந்தனர். கேரள மாநில போலீசாரால் விசாரிக்கப்பட்ட முக்கியமான இவ்வழக்கு 'வடகரா ஹிட் அண்ட் ரன்' என, கூறப்பட்டு வந்தது. இருப்பினும் டிரைவரை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர்.

இச்சம்பவம் கேரள உயர் நீதிமன்றம் மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தின் கவனத்துக்கு சென்றதால் அதிகளவில் பேசப்பட்டது.

விசாரணைக்காக டி.எஸ்.பி., தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழு ஏற்படுத்தப்பட்டது. விசாரணையின் ஒரு பகுதியாக, 500 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் வெள்ளை நிற கார் ஒன்று விபத்தை ஏற்படுத்தியது தெரிந்தது.

தொடர் விசாரணையில் காரின் உரிமையாளர் ஷஜீல், தனது குடும்பத்துடன் பயணம் செய்யும் போது விபத்து நடந்தது தெரிந்தது. அரபு நாட்டில் பணிபுரிந்து வந்த அவரை ஆஜராக போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் அவர் ஆஜராகவில்லை.

இதையடுத்து அவரது டிரைவிங் லைசென்ஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. நேற்று முன்தினம் கோவை விமான நிலையத்துக்கு ஷஜீல் வரும் தகவல் கேரள போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து கோவை வந்த கேரள போலீசார் விமானநிலையத்தில் அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.






      Dinamalar
      Follow us