ADDED : ஜூன் 02, 2025 11:30 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை திருச்சி ரோடு,- சிங்காநல்லூரில் எலக்ட்ரிக் கார் ஷோரூம் உள்ளது. இங்கு, 10 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த 31ம் தேதி ஊழியர் சரவணகுமார், ஷோரூமில் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சரக்கு இருப்பு பகுதியில், நிறுத்தப்பட்டிருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக் கார் மாயமாகியிருந்தது. சிங்காநல்லூர் போலீசாரிடம் சரவணகுமார் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில் ஷோரூம் வந்த வாலிபர் மாற்று சாவி மூலம், காரை திருடி சென்றது தெரிந்தது. விசாரணையில், காரை திருடிச் சென்றது குனியமுத்துரை சேர்ந்த கர்ணன், 35 எனத் தெரிந்தது. அவரை போலீசார் சிறையில் அடைத்தனர். திருடிய காரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

