/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மனைவிக்கு தவறான 'மெசேஜ்' அனுப்பிய கணவர் மீது வழக்கு
/
மனைவிக்கு தவறான 'மெசேஜ்' அனுப்பிய கணவர் மீது வழக்கு
மனைவிக்கு தவறான 'மெசேஜ்' அனுப்பிய கணவர் மீது வழக்கு
மனைவிக்கு தவறான 'மெசேஜ்' அனுப்பிய கணவர் மீது வழக்கு
ADDED : பிப் 08, 2025 05:54 AM
கோவை; மனைவிக்கு தவறான மெசேஜ் அனுப்பிய கணவர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
ராமநாதபுரம், பசும்பொன் நகரை சேர்ந்தவர் அனுஷா, 32. இவருக்கு, சேரன் மாநகரை சேர்ந்த ராஜா, 45 என்பவருடன், 2017ம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது. திருமணமாகி ஒரு ஆண்டு ஆகியிருந்த நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
அனுஷா தனது கணவரிடம் இருந்து, விவாகரத்து கேட்டு குடும்ப நல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ராஜா, அடிக்கடி தனது மனைவிக்கு போன் செய்து, தொந்தரவு செய்து வந்தார்.
கடந்த சில நாட்களாக, அனுஷாவின் மொபைல் எண்ணுக்கு தவறான மெசேஜ்களை அனுப்பி வந்தார். இது குறித்து அனுஷா கேட்ட போது, ராஜா அவரை மிரட்டினார். கணவர் மீது அனுஷா ராமநாதபுரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் ராஜா மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.