/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அனுமதியின்றி பட்டாசு விற்றவர் மீது வழக்கு
/
அனுமதியின்றி பட்டாசு விற்றவர் மீது வழக்கு
ADDED : அக் 26, 2024 11:18 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாநகரில் 400க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில், கோவை மாநகர போலீசாரின் அனுமதியுடன், பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சரவணம்ட்டி அஞ்சுகம் நகரில் உள்ள ஒரு மளிகை கடையில், பட்டாசு விற்பனை செய்யப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
விசாரணையில், அனுமதி இல்லாமல் பட்டாசு விற்பனை செய்தது தெரியவந்தது. பட்டாசு விற்பனை செய்த பெரியசாமி, 49 என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.கடையில் இருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.