/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே இசைப்போட்டி
/
சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே இசைப்போட்டி
ADDED : அக் 10, 2024 05:42 AM

கோவை : கோவை சகோதயா சங்கம் சார்பில், 45வது சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையேயான இசைப்போட்டி நடந்தது.
பல்வேறு சி.பி.எஸ்.இ., பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், ஆர்வத்துடன் பங்கேற்று, 'இயற்கையை வளர்க்க', 'பாரதியும் நானும்', 'தியாகராச கீர்த்தனை' ஆகிய தலைப்புகளில் பாடி, பார்வையாளர்களை அசத்தினர்.
இப்போட்டியில், நடுவர்களாக இசைக்கலைஞர்கள் அம்சவர்தினி, பாக்கியலட்சுமி, ஸ்ரீகலா, சுருதி, குகனேஸ்வரன், ஸ்ரீராம் ஆகியோர் பங்கேற்றனர். சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வில், பள்ளியின் நிறுவனர்கள் கிரீசன், ஹனி கீரிசன், முதல்வர் பிரமிளா பாலன், நிறுவன இயக்குனர் காவ்யா மற்றும் நிர்வாக அதிகாரி சுந்தரமகாலிங்கம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

