sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

' வேலு நாச்சியாருக்கு மத்திய அரசு கவுரவம் '

/

' வேலு நாச்சியாருக்கு மத்திய அரசு கவுரவம் '

' வேலு நாச்சியாருக்கு மத்திய அரசு கவுரவம் '

' வேலு நாச்சியாருக்கு மத்திய அரசு கவுரவம் '


ADDED : டிச 25, 2024 10:26 PM

Google News

ADDED : டிச 25, 2024 10:26 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவையில் உள்ள உலகத் தமிழ்நெறிக் கழகம் சார்பில், வேலு நாச்சியாரின், 228-வது நினைவு நாள் விழா, பொதுப்பணி பொறியாளர் அரங்கில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சிக்கு, உலகத்தமிழ் நெறிக் கழக செயலாளர் சிவலிங்கம் தலைமை வகித்தார்.துணைத் தலைவர் குரு பழனிசாமி முன்னிலை வகித்தார். மூத்த தமிழறிஞர் காட்டூர் சம்பத் உள்ளிட்டோருக்கு விருது வழங்கப்பட்டது.

வேலு நாச்சியார் குறித்து ஆய்வு செய்த,புதுச்சேரி கலைவரதன் பேசியதாவது:

மத்திய, மாநில அரசுகள் வேலு நாச்சியாருக்கு, பல கவுரவங்களை அளித்துள்ளன. மத்திய அரசு உ.பி., மாநிலம் துக்ளாபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு, வேலு நாச்சியார் பெயரை சூட்டி உள்ளது. கடலோர காவல் படை கப்பலுக்கு, வேலு நாச்சியார் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மதுரை விமான நிலையத்தில் உள்ள, வேலு நாச்சியாரின் சிலை அனைவரையும் பிரமிக்க வைக்கிறது. சுதந்திரத்துக்காக போரிட்ட, முதல் பெண் அரசி என்ற பெருமையை நமக்கு தேடி தந்தவர் வேலு நாச்சியார். இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us