sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'சென்டம்' பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

/

'சென்டம்' பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

'சென்டம்' பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்

'சென்டம்' பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்


ADDED : செப் 03, 2025 11:18 PM

Google News

ADDED : செப் 03, 2025 11:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; 2024-25 கல்வியாண்டில், 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

கோவை மாவட்டத்தில், 10ம் வகுப்பில் 41 அரசு பள்ளிகள், 14 அரசு உதவி பெறும் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்றன. 12ம் வகுப்பில் 21 அரசு மேல்நிலைப்பள்ளிகள், 12 அரசு உதவி பெறும் பள்ளிகள் பாராட்டு சான்றிதழுக்கு தகுதி பெற்றுள்ளன.

தமிழ் பாடத்தில் 100 மதிப்பெண், 10ம் வகுப்பில் கோவையில் மூன்று மாணவர்கள் உட்பட மாநிலம் முழுவதும் 8 அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் 12ம் வகுப்பில் 135 அரசு பள்ளி மாணவர்கள் பெற்றுள்ளனர். திருச்சியில் 7ம் தேதி நடைபெற உள்ள விழாவில், பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us