/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்த தானம் வழங்கிய 44 பேருக்கு சான்றிதழ்
/
ரத்த தானம் வழங்கிய 44 பேருக்கு சான்றிதழ்
ADDED : பிப் 28, 2026 08:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி: பொள்ளாச்சி ரோட்டரி கிளப், 'பொள்ளாச்சி யூஸ்டு கார் அசோசியேசன்' சார்பில், ரத்த தான முகாம், ரோட்டரி ஹாலில் நடந்தது. அதில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை டாக்டர் மாரிமுத்து மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர், ரத்த தானம் அளிப்பதன் அவசியம் குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினர்.
மேலும், பரிசோதனை செய்து, ரத்தம் தானமாக பெற்றனர். அதில், ஆர்வமாக பலரும் பங்கேற்று ரத்தம் தானமாக வழங்கினர். மொத்தம், 44 பேர் ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

