ADDED : அக் 01, 2024 11:27 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : சேலம் கோட்ட ரயில்வேயில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, எர்ணாகுளம் - டாட்டா நகர் எக்ஸ்பிரஸ்(18190) ரயில், வரும், 3, 5, 7 ஆகிய தேதிகளில், போத்தனுார், கோவை திருப்பூர் வழியாக இயக்கப்படும். கோவை - ஈரோடு இடையே ரயில் இயக்கம், 50 நிமிடம் ஒழுங்கு படுத்தப்படும்.
அதேபோல், வரும், 3, 5, 7ம் தேதிகளில், ஆலப்புழா - தன்பாத்(13352) எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம், 45 நிமிடங்கள் ஒழுங்குபடுத்தப்படும் என, சேலம் கோட்ட ரயில்வே துறை அறிவித்துள்ளது.

