ADDED : ஜூலை 25, 2025 09:32 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; ரயில் பாதை பராமரிப்பு பணி காரணமாக, இரு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இன்று மற்றும் வரும் 31ம் தேதி, எர்ணாகுளத்தில் இருந்து காலை 7:15 மணிக்குப் புறப்படும் டாடா நகர் எக்ஸ்பிரஸ் (எண்: 18190), போத்தனூர் இருகூர் வழியாக செல்வதற்குப் பதிலாக, போத்தனூர், கோவை, இருகூர் வழியாக செல்லும்.
இன்று மற்றும் வரும் 31ம் தேதி ஆலப்புழாவில் இருந்து, காலை 6:00 மணிக்குப் புறப்படும் தன்பாத் எக்ஸ்பிரஸ், கோவை ரயில் நிலையத்துக்கு வராமல், போத்தனூர் இருகூர் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் மேற்கண்ட நாட்களில் போத்தனூரில் நின்று செல்லும்.
இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

